பன்னாட்டு திருக்குறள் மாநாடு உருவான கதை
வாசிங்டன் டிசி வட்டாரத்தில் வசிக்கும் தமிழ் உணர்வாளர்களில் முனைவர்.பிரபாகரன் அவர்கள் திருக்குறள் மீது மிகுந்த பற்றுடையவர். திருக்குறளை ஆழ்ந்து படித்து அறிந்தவர். 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முனைவர்.பிரபாகரன் ஒரு இலக்கிய ஆய்வுக் கூட்டத்தை தொடங்கினார். இந்தக் கூட்டம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கூடுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் திருக்குறளின் ஒரு அதிகாரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த அதிகாரத்தில் உள்ள 10 குறள்களும் அலசப்படுகின்றன. பரிமேலழகர், மு.வரதராஜன், கலைஞர் கருணாநிதி, Dr. S.M. Diaz, Rev. Drew & John Lazarus போன்ற ஆய்வாலர்களின் திருக்குறள் பற்றிய உரைகள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. இப்படி முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் தொடங்கி தற்போது வெகுளாமை வரை இந்த இலக்கிய ஆய்வுக் கூட்டம் வெற்றிகரமாக முன்னேறியிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு கிடைத்த வரவேற்பையும், பங்கேற்பையும் பார்த்த பிரபாகரன், வாசிங்டன் டிசியில் ஒரு திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என்ற விருப்பத்தை சென்ற வருடம் தெரிவித்தார். அதற்குக் கிடைத்த பெரும் ஆதரவைக் கொண்டு, அன்றிலிருந்து மாநாட்டு ஏற்பாட்டு வேலைகள் தொடங்கப்பட்டு, இன்று வரை தடங்கலின்றி சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 4 மாதங்களே இருக்கும் இந்த நிலையில், எங்களது உழைப்பாலும் உங்களது ஆதரவாலும் இந்த மாநாடு பெரும் வெற்றியடையும் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்.
நன்றி,
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு
2 Comments:
மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள்.
முயற்சிக்கு மகிழ்ச்சி.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்
Post a Comment
<< Home